• முகப்பு
  • அரசியல்
  • கள்ளச்சாராய சாவுக்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக கோரி அதிமுக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளச்சாராய சாவுக்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக கோரி அதிமுக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

JK

UPDATED: Jun 24, 2024, 1:29:56 PM

அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் 62 பேர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மனோகரன் உட்பட ஏராளமான பங்கேற்றனர்.

 

VIDEOS

Recommended