• முகப்பு
  • அரசியல்
  • தவெக முதல் மாநாடு வெற்றி பெற சிறப்பு பூஜை : மாங்காடு கோயிலில் தங்கத்தேர் பவனி.

தவெக முதல் மாநாடு வெற்றி பெற சிறப்பு பூஜை : மாங்காடு கோயிலில் தங்கத்தேர் பவனி.

ஆனந்த்

UPDATED: Oct 24, 2024, 11:03:42 AM

மாங்காடு

நடிகர் விஜய் நடத்தும் தவெக கட்சியின் மாநாடு வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியினர் மாங்காடு கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். 

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு வெற்றி பெற வேண்டுமென தவெக கட்சியினர் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை செய்தனர்.

தவெக கட்சியின் சென்னை புறநகர் மாவட்ட இளைஞரணி பொருளாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையின்போது, மாநாடு வெற்றி பெற வேண்டி தங்க தேர் பவனி நடத்தப்பட்டது.

நடிகர் விஜய்

அத்துடன் 200 பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் இசிஆர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசிஆர் சரவணன், "எங்கள் கட்சியின் மாநாடு மிகப்பெரும் வெற்றி பெறும். தடைகள் என்பது எங்களுக்கு புதிதல்ல. காவலன் திரைப்படத்திலிருந்து எங்கள் தலைவருக்கு பல்வேறு தடைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற இருந்த மாநாடு இந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் எங்களுக்கு மாநாடு வேலைகளை கவனிக்க கூடுதலாக நேரம் கிடைத்ததில் மகிழ்ச்சி தான்.

தவெக கட்சி

உலகமே எதிர்பார்க்கும் ஒரு மாநாடாக இது இருக்கும். எங்கள் தலைவர் விஜயை காண லட்சக்கணக்கானோர் திறல்வார்கள். 

திறந்த வெளியில் நடைபெறும் மாநாடு என்பதால் எத்தனை பேர் வருவார்கள் என்பதை சரியாக குறிப்பிட்டு கூற இயலாது. அதேநேரம் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் வரவேண்டாம் என எங்கள் தலைவர் விஜய் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இது போன்ற ஒரு தலைவரை காணவே முடியாது.

நடிகர் விஷால் ஒரு வாக்காளராக எங்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.

 

VIDEOS

Recommended