• முகப்பு
  • அரசியல்
  • றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைவு

றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைவு

எஸ்.அஷ்ரப்கான்

UPDATED: Jun 1, 2024, 4:09:05 AM

முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளும் சிறப்பு நிகழ்வு சாய்ந்தமருது பாபா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நேற்று (31) மாலை நடைபெற்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஐயூப்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

 அண்மைய  காலமாக கிழக்கு மாகாண அரசியலில் ஒரு மாற்றத்தை தோற்றுவிக்க கூடிய செல்வாக்குள்ள ஒருவராக  சமூக சேவையாளர் ரிஸ்லி முஸ்தபா பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்), முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக எம்.ஐ.எம். மாஹிர், எம்.எஸ்.எம்.சுபைர் உட்பட கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உயர் பீட உறுப்பினர்கள், உலமாக்கள், கல்விமான்கள், இளைஞர்கள் மாற்றும் றிஸ்லி முஸ்தபாவின் ஆதரவாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

VIDEOS

Recommended