• முகப்பு
  • அரசியல்
  • இலங்கையின் 9 வது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை தெரிவு செய்ய மக்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்னர்

இலங்கையின் 9 வது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை தெரிவு செய்ய மக்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்னர்

வவுனியா / ஏ.எம்.கீத்-திருகோணமலை

UPDATED: Sep 21, 2024, 3:28:26 AM

இலங்கையின் 9 வது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை தெரிவு செய்ய மக்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்னர்.காலை 7 மணி முதல் இந்த வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4.00 மணியுடன் நிறைவு பெறும்.தற்போது வவுனியா.திருகோணமலை பகுதிகளில் இடம்பெரும் வாக்களிப்பு காட்சிகள்

original/whatsapp-image-2024-09-21-at-08

திருகோணமலை...

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று காலை 06:45 மணியளவில் திரியாய் பிள்ளையார் கோவிலில் வழிபட்டு விட்டு.

திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்  KS குகதாசன் திருக்கோணமலைத் தொகுதியில் உள்ள தனது கிராமமான திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது சனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

இந்த வாக்குச் சாவடியில் முதலாவது வாக்காக தனது வாக்கை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா………

original/img_20240921_074552
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

original/img_20240921_071302
வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார்.

 

VIDEOS

Recommended