• முகப்பு
  • அரசியல்
  • திமுக அரசின் கையாலாகாத தனத்தால் மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி  விலைவாசி பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

திமுக அரசின் கையாலாகாத தனத்தால் மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி  விலைவாசி பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

தருண்சுரேஷ்

UPDATED: Oct 7, 2024, 5:58:07 PM

திருவாரூர் மாவட்டம்

மன்னார்குடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக திருவாரூர் மாவட்ட பொருப்பாளரகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலரும் , முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ  தலைமையில் நடைப்பெற்றது . 

இதில் மாநில அமைப்பு செயலர் சிவா ராஜமாணிக்கம்   முன்னாள் எம்பி திருச்சி இளவரசன் , நகர செயலர் ஆர்.ஜி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்.காமராஜ் 

மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.காமராஜ் எம்எல்ஏ பேசும் போது திமுக அரசின் கையாலாகாத தனத்தால் மின்சார கட்டணம் உயர்வு வீட்டு வரி உயர்வு சொத்து வரி உயர்வு போன்ற விலைவாசி உயர்வு போன்று பல்வேறு பிரச்சனைகளால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

திமுக 1000 ரூபாய் கொடுத்தார்கள் நமது அண்ணன் எடப்பாடியாரின் ஆட்சி அமைந்ததும் எவ்வளவு தொகை என்பதை அறிவிப்பார்கள்.

ADMK

அது மக்களுக்கு சென்றடைய வேண்டிய பணம் அது முறையாக சென்றடையும் . அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் அனைவரும் பயனுடைய திட்டம் . ரூ 2500 கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கபட்டது .

கையாளாகாத திமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து நாளை ஒவ்வொரு நகராட்சிக்கு முன்பும் அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது

இதில் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டு மனித சங்கிலி போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

VIDEOS

Recommended