• முகப்பு
  • அரசியல்
  • ராகுல் காந்தியை பார்க்க விடாத உதகை எம்எல்ஏ மற்றும் காவல்துறையினரை ஒழிக என்று கோஷமிட்ட கேரளா எம் எல் ஏக்கள்

ராகுல் காந்தியை பார்க்க விடாத உதகை எம்எல்ஏ மற்றும் காவல்துறையினரை ஒழிக என்று கோஷமிட்ட கேரளா எம் எல் ஏக்கள்

அச்சுந்தன்

UPDATED: Apr 15, 2024, 7:46:34 PM

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தாலூர் பகுதிக்கு ராகுல் காந்தி இன்று கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகை புரிந்தார் தாளூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இடையே உரையாற்றினார் பின்பு தனது சொந்த தொகுதியான கேரளா மாநிலம் வயநாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

ராகுல் காந்தி வருகையை ஒட்டி தாளூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இந்நிலையில் ராகுல் காந்தியைக் காண சில கேரளா எம் எல் ஏக்கள் வந்ததாக கூறப்படுகிறது

அவர்களை கூட்ட அரங்கிற்கு காவல் துறையினர் அனுமதிக்காததால் மேலும் உதகை எம்எல்ஏ கணேசன், கேரளா எம்எல்ஏக்களை அழைக்காததால் கணேசன் ஒழிக கணேசன் ஒழிக என்றும் அனுமதி மறுத்த காவல்துறையினரையும் கண்டித்து கேரளா எம் எல் ஏக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர் இதனால் கல்லூரியின் வெளிப்பகுதியில் பரபரப்பு நிலவியது

VIDEOS

Recommended