• முகப்பு
  • அரசியல்
  • நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜவாத் தலைமையில்

நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜவாத் தலைமையில்

அஹமத் ஜமீல்

UPDATED: Sep 9, 2024, 3:30:35 AM

நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் அம்பாறை மாவட்ட செயல்குழு தலைவர் ஜவாத் அவர்களின் தலைமையில்  அக்கரைப்பற்றில் நடைபெற்றது

ஜனாதிபதி தேர்தலில் பல மேற்பார்வையாளர்கள் போட்டியிட்டாலும் அதில் வெற்றி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் தேசிய தலைவர் றிஷாத் பதியூதீன் அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் ஆலோசனையை கேட்டறிந்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிப்பது என்ற முடிவுடன் மக்கள் காங்கிரஸ் கட்சி இருக்கும் நிலையில் சஜித் பிரேமதாசா அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டிய கடமைப்பாடு மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதால் அதற்கான பணிகளை மிகவும் சிறப்பாக செய்வதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டன

original/img-20240901-wa0081
சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றியை உறுதிபடுத்தும் முகமாக மக்கள் காங்கிரஸ் கட்சியின் போராளிகள் தேர்தலுக்கு முன் மக்களிடம் சென்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களை பற்றி தெளிவுபடுத்தி டெலிபோன் சின்னத்துக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இன்று முடிவு நிறைவேற்றப்பட்டது 

நடை பெற்ற கூட்டம் அக்கரைப்பற்று மண்ணின் மைந்தனும் முன்னாள் அக்கரைப்பற்று பள்ளிவாசல் சம்மேளன தலைவரும் தொழிலதிபருமான சபீஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended