• முகப்பு
  • அரசியல்
  • திருமழிசை பேரூராட்சி தலைவர் விபத்தில் உயிரிழந்ததால் திமுக வேட்பாளர் ஜெ.மகாதேவன் போட்டின்றி தேர்வு

திருமழிசை பேரூராட்சி தலைவர் விபத்தில் உயிரிழந்ததால் திமுக வேட்பாளர் ஜெ.மகாதேவன் போட்டின்றி தேர்வு

சுரேஷ் பாபு

UPDATED: Aug 6, 2024, 8:59:21 AM

திருவள்ளூர் மாவட்டம்

திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என.6 வார்டுகளை அதிமுகவும் 3, 4, 5, 8, 10, 12 ஆகிய 6 வார்டுகளை திமுகவும் கைப்பற்றின. 2 வது வார்டை மதிமுக வும், 9 வது வார்டை பா.ம.க.,வும், 11வது வார்டை சுயேட்சையும் கைப்பற்றினர்.

இதில், திமுக கூட்டணி 7 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும் அதிமுக கூட்டணியிலிருந்து தனித்து போட்டியிட்ட பாமக ஒரு வார்டையும், சுயேச்சையாக 11 வது வார்டில் போட்டியிட்டவர் வெற்றி பெற்று பாஜ வில் இணைந்தார்.

திமுக

இதில், பேரூராட்சியில் நடந்த மறைமுக தேர்தலில், திமுக வைச் சேர்ந்த உ.வடிவேல் தலைவராகவும், மகாதேவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

இந்நிலையில் கடந்த மே மாதம் 12 ம் தேதி பேரூராட்சித் தலைவர் உ.வடிவேல் விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமால் கடந்த மே 16 ம் தேதி சிகிச்சை பலனின்றி உ.வடிவேல் உயிரிழந்தார்.

DMK

இதனையடுத்து, துணை தலைவர் ஜெ.மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 6 ம் தேதி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

அதிமுக | ADMK

இதனால், தலைவர் பதவிக்கு திமுக, அதிமுக வினரிடையே கடும் போட்டி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தலை புறக்கணித்ததால் திமுக சார்பில் துணைத் தலைவர் ஜெ.மகாதேவன் மட்டுமே போட்டியிட்டார்.   

இதனால் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.மகாதேவன் மட்டும் போட்டியிட்டார். இந்நிலையில் தலைவராக ஜெ.மகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக செயல் அலுவலர் ம.வெங்கடேஷ் அறிவித்தார்.



VIDEOS

Recommended