மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்.

ராஜ் குமார்

UPDATED: Jul 27, 2024, 11:40:32 AM

கோயம்புத்தூர் மாவட்டம்

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது.

'கோவையில் மருத்துவர் பழனிவேல் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.

கொங்கு மண்டலம் என்றாலே தமிழ்நாட்டிற்கு தொழில் வளத்தை கொடுக்கின்ற மண்டலமாகும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த பகுதியில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட 

குறு சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக மின் கட்டண உயர்வு உள்ளது.

அன்புமணி ராமதாஸ்

குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு பல நிறுவனங்கள் மூடிய பிறகும், தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது. 2002 செப்டம்பர் மாதம் 26 விழுக்காடு மின் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. 

2023 ஜூலை மாதம் 2.1 விழுக்காடு உயர்த்தி உள்ளது. 2024 ஜூலை மாதம் 4.8 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 34 விழுக்காடு 23 மாதங்களில் மின்கட்டணம் திமுக அரசு உயர்த்தி உள்ளது. இதை வன்மையாக கண்டிப்பது மட்டுமின்றி திரும்ப பெற வேண்டியது. இதனால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், குறைக்க வேண்டும் இல்லையேல், தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத சூழல் உருவாகும். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்ததும் மாதம் தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு என தெரிவித்தனர்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மற்ற மாநிலங்களில் இதை செய்யும்போது ஏன் இங்கு முடியவில்லை. அப்படி எடுத்தால் 15 முதல் 18 விழுக்காடு மின்கட்டணம் குறையும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு செலவை குறைக்கும். 

காவிரி நீர் 

காவிரியில் நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. இப்போது வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு அத்தனை நீரும் கடலுக்கு தான் செல்ல இருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தும் இந்த நீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. 

பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குறிப்பாக தர்மபுரி காவேரி உபரி நீர் திட்டம், மேட்டூர் சேலம் உபரி நீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், நல்லாரு பாம்பாறு திட்டம். குறிப்பாக, காவிரி குண்டாறு திட்டம் ஆறு மாவட்டத்திற்கு கரூர் நீர் ஆதாரமாக உள்ள திட்டமாகும். 17,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்போது குறுவை சாகுபடி சரியான முறையில் நடைபெறவில்லை. இதற்கு காரணம் தண்ணீர் இல்லாததாகும். ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும்.

இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இப்போது தண்ணீர் வந்துள்ளது. சம்பாவுக்காவது தயார் நிலையில் இருக்க வேண்டும். கடைகோடிக்கு நீர் போக முடியாத சூழல்தான் தற்போதும் உள்ளது.

பாமக

கோவையில் கனிமவள கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. பாமக சார்பில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

செங்கல் சூளை, கேரளாவிற்கான ஏற்றுமதி என கனிம வள கொள்ளை பல நடந்து வருகிறது. அரசு இதில் மெத்தனம் காட்டி வருகிறது. இதிலிருந்து தான் பலருக்கும் வருமானம் செல்கிறது. 

மின் கட்டண உயர்வுக்கு காரணம் மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும் தான் காரணம். தமிழ்நாட்டின் மின் தேவை உச்சத்தில் கோடைகாலத்தில் 20 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும்.

அதில் 2000 மெகா வாட் தான் தமிழக அரசு தயாரிக்கிறது. மீதி உள்ள 15,000 மெகாவாட்டில் கிட்டத்தட்ட நான்காயிரம் மெகாவாட் மத்திய அரசிடம் பெறுகிறது. 11000 மெகாவாட் தனியாரிடம் பெறுகிறது. தமிழக அரசு தயாரிக்கும் மின்சாரம் ஒரு யூனிட் 3.40 பைசா என்றால் தனியார் நிறுவனங்களிடமிருந்து 11 முதல் 15 ரூபாய்க்கு வாங்குகிறது.

வேண்டுமென்று தமிழக அரசு புதிய மின் திட்டங்களை தொடங்க தயங்குகிறது. காரணம் தனியாரிடமிருந்து அதிக கமிஷன் கிடைக்கும் என்பது தான்.

District News & Updates in Tamil

கோவை மாநகரில் 80 விழுக்காடு சாலைகள் பழுதடைந்துள்ளது. ஏன் கோவை மேயர் பதவி விலகினார் என விசாரணை நடத்த வேண்டும். வெள்ளலூரில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க பல லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளில் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அத்திக்கடவு அவினாசி திட்டம் எப்போதுதான் கொண்டுவர போகிறார்கள்? என்ன பிரச்சனை? 1500 கோடி ரூபாய்க்கு தான் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரைகுறையாக செய்து அதை இன்னும் முடிக்கவில்லை. தென்மேற்கு பருவமழை வரும் சூழலில் தண்ணீரை கடலுக்கு அனுப்பிவிட்டு வரட்சி என்ற சூழல் உருவாக்குவது, இந்த அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை என கூறலாம்.

பாண்டியாரு பொன்னம்புழா ஆகிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும். காலநிலை மாற்றம்தான் வருங்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதில் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

கஞ்சா கள்ளச்சாராய வியாபாரம்

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பலமுறை புகார் அளித்தாலும் ஒரு கூட்டத்தை நடத்துகின்றனர். கஞ்சா ஆய்வு நடத்தப்பட்டு கைது செய்யப்படுபவர்கள் 15 நாளில் வெளியே வந்து விடுகின்றனர். மதுவை கொடுத்து மூன்று தலைமுறை நாசப்படுத்தியது போல கஞ்சாவை கொடுத்து இந்த தலைமுறையை நாசப்படுத்தி வருகின்றனர். 

காவல்துறைக்கு தெரியாமல் கஞ்சா கள்ளச்சாராய வியாபாரம் செய்ய முடியாது. இப்போது கள்ளச்சாராயத்திற்கான புதிய சட்டத்தை வலிமைப்படுத்தி உள்ளனர். அதன்படி ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் கூறியுள்ளனர்.

சந்து கடையில் விற்பவர்களை என்ன செய்யலாம். அதுவும் கள்ளச்சந்தை தான் அதுவும் கள்ள சாராயம் தான். அவர்களுக்கும் ஆழ்ந்த தண்டனை கொடுக்க வேண்டும். திமுகவினர்தான் இதை செய்கின்றனர். திமுகவினர்தான் பார் நடத்துகின்றனர். 

தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உடனடியாக அறிவிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் 69 இட ஒதுக்கீடு ரத்து ஆகக்கூடிய சூழல் வந்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு பிரச்சினையாகும். உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை எடுக்கும்போது முதல் கேள்வியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினீர்களா என கேட்பார்கள்.

எந்த அதிகாரத்தில் எந்த இட ஒதுக்கீடு சட்டம் இருக்கிறது என கேள்வி கேட்பார்கள். இதே போல் தான் 2010லும் கேட்டார்கள். நமக்கு ஒன்பதாவது அட்டவணை பாதுகாப்பு இருந்தாலும், இருந்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்னால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. எனவே தொடர்ந்து இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் இடம் கூறியுள்ளோம். ஆனால் அவர்கள் அதிகாரம் இல்லை என கூறுகின்றனர். அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு இருக்கிறது. 

பிஹார் - ஆந்திரா - கர்நாடகா - தெலுங்கானா - ஒரிசா - ஜார்கண்ட்

பிஹார், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒரிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இவ்வளவு மாநில முதல்வர்களுக்கும் அதிகாரம் இருக்கும்போது தமிழக முதல்வருக்கு இல்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் காரணமாக இந்த விவகாரத்தில் முதல்வர் தயங்குகிறார். 

இது சமூகநீதி பிரச்சனையாகும். மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். மத்திய அரசு செய்வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். 2021 ல் கொரோனா காரணமாக எடுக்கவில்லை. 2026ல் எடுக்க உள்ளனர்.

அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஜாதியின் தலைகள் தான் என்னப்படும், சமூகத்தின் நிலை மற்றும் பொருளாதார சூழல் குறித்து எடுக்க முடியாது. உண்மையிலேயே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் தமிழகத்தில் எந்தெந்த சமுதாயம் எந்தெந்த நிலையில் உள்ளது என்ன பொருளாதார நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். Caste survey எடுக்க வேண்டும்.

அதிகாரம் இல்லை எனக் கூறுவது கோழைத்தனம்.

69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துள்ளது. உங்களது காலத்தில் உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தால். அன்றைக்கு திமுக அரசு கவிழும் என்பது உறுதி.

நிதி ஆயோக் கூட்டத்தைப் பொறுத்தவரை 48 லட்சம் கோடி பட்ஜெட் போட்டுள்ளனர். அதில் தமிழகத்திற்கு எதுவும் வராது என கூறுகின்றனர்.

காங்கிரஸ்

இதுவரை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எல்லா மாநிலத்தின் பெயரை கூறியுள்ளனரா? காங்கிரஸ் எல்லா மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் சொல்லியுள்ளதா. திட்டங்கள் வரும். தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை என்னென்னவென்று தெரியவரும். 

ரயில்வே துறையில் தமிழகத்தில் 6600 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6300 கோடி கொடுக்கப்பட்டிருந்தது. கூடுதலாக தான் நிதி வழங்கப்படுகிறது. ரயில்வே துறை போன்று ஒவ்வொரு துறையிலும் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. பெயர் சொல்லவில்லை என புறக்கணிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 

கடந்த ஆண்டு வெள்ளம் வந்த நிலையிலும் மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும் என நான் கூறியிருக்கிறேன். அதே நேரத்தில் தமிழக அரசு 3 லட்சம் கோடி பட்ஜெட்டில், ஆயிரம் கோடி 

நிதியை வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கீடு செய்ய முடியாதா? அந்த அளவிற்கு திறமை கிடையாதா.. வெள்ளம் வறட்சி வரும் என தெரிந்தும் ஏன் பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எல்லாமே மத்திய அரசு கொடுக்க வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல. மாநில அரசின் கடமையும் இதில் உள்ளது.

நீட் தேர்வு

தமிழகத்தின் உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. கோயம்புத்தூர் மெட்ரோவிற்கு நிதியை சண்டை போட்டு கட்டாயம் வாங்குவோம்.

நீட் தேர்வு இருக்கக்கூடாது அது தேவையில்லாத தேர்வு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் 

ஏற்ப அதன் கொள்கைகளை விட்டு விட வேண்டும். நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, சமூக நீதி மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது. மேலும் நீட் தேர்வில் இரண்டடுக்கு தேர்வு வரவுள்ளது என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது பயிற்சி நிலையங்களை இன்னும் அதிகமாகலாம். ஆண்டுதோறும் நீட் பயிற்சி தரும் நிறுவனங்களின் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதல் வருமானம் நீட்டினால் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு மருத்துவத்தில் இளங்கலை படிக்க 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இருந்த நிலை மாறி இப்போது 30 லட்சம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது. எனவே நீட் என்பது பணக்காரர்களுக்காக வந்தத. பயிற்சி நிலையங்களுக்காக வந்துள்ளது. அரசு பள்ளிக்கூடங்களுக்காக இல்லை. சிபிஎஸ்சி பாடத்திட்டம் தான் அதில் உள்ளது. மாநில அரசின் பாடத்திட்டத்தில் இல்லை.

நீட்டினால் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் குறிப்பாக தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிக்களாக மாறி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டின் வரலாறு இடம்பெறவில்லை' என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended