• முகப்பு
  • அரசியல்
  • Breaking - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக பதற்றம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Breaking - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக பதற்றம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 5, 2024, 7:56:07 AM

தயாஸ்ரீ ஜெயசேகரவின் வருகையினை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக பதற்றம் 

நீதிமன்ற உத்தரவின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் வந்தபோது, ​​அந்த இடத்தில் கடும் குழப்பநிலை தோன்றியது.

 எனினும் தயாசிறி ஜயசேகரவிற்கு கட்சி தலைமையகத்திற்குள் வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 இதனை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள டார்லி வீதியில் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் டேஷ் ஜெயசேகர எமது தி கிரேட் இந்தியா நியூஸ் இணையத்துக்கு கருத்து தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தாம் இன்னமும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்று (05) காலை முதல் தனது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைப்பதாக அவர் தெரிவித்தார்.



 

 

VIDEOS

Recommended