• முகப்பு
  • அரசியல்
  • விஜய் உத்தரவை மீறிய அவரது ரசிகர்கள் தங்க தேர் இழுத்து பிறந்தநாள் கொண்டாட்டம்.

விஜய் உத்தரவை மீறிய அவரது ரசிகர்கள் தங்க தேர் இழுத்து பிறந்தநாள் கொண்டாட்டம்.

சுந்தர்

UPDATED: Jun 22, 2024, 10:10:19 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 50வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அன்னதானம், நலத்திட்ட உதவிகள், கோயிலில் சிறப்பு அபிஷேகம் என ஆங்காங்கே பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்த நிலையில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவை மீறி சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ஈசிஆர் சரவணன் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்னையை அடுத்த மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கையில் விஜய் படத்துடன் தங்க தேர் இழுத்து கொண்டாடினர். 

அதேபோல் மாங்காடு ஶ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தில் 200 போருக்கு அன்னதானம் வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை அவரது உத்தரவை மீறி சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கட்சி துவங்கி ஒரு சில மாதங்களில் தலைவர் உத்தரவை மீறி செயல்படும் சென்னை புறநகர் நிர்வாகிகள் மீது விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் உத்தரவை மீறி மற்ற நிர்வாகிகள் எந்த கொண்டாட்டமும் செய்யாத நிலையில் சரவணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

VIDEOS

Recommended