• முகப்பு
  • அரசியல்
  • பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற ஒரே கட்சி அதிமுக

பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற ஒரே கட்சி அதிமுக

ஆர் .தீனதயாளன்

UPDATED: Apr 15, 2024, 6:19:55 AM

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் வை. செல்வராஜ் ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்காக மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசும்போது :

தமிழகத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே 40 தொகுதிகளில் போட்டியிடுகின்ற ஒரே கட்சி அதிமுக கட்சி எனவும்

அதிமுக 40 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காரணம் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஓட்டுகளை வாங்கி திமுக தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை இழக்கும் என எண்ணிக்கொண்டு போட்டியிடுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும்.. டிடிவி சசிகலா ஓபிஎஸ் ஆகியோர் ஆறு வருடங்களாக இரட்டை இலையை மீட்போம்... அதிமுகவை மீட்போம் அம்மா ஆட்சி அமைப்போம் என பொய் பிரச்சாரங்களை ஏற்படுத்தி தமிழக மக்களுக்கு இது நாள் வரை எதுவும் செய்ததில்லை எனவும்

மேலும் ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் இருந்தபோது உடன் இருந்த ஓபிஎஸ் சசிகலா டிடிவி ஆகியோர் தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைத்திருந்தால் காவிரியை மீட்டிருக்கலாம் எனவும் விவசாயிகள் அதிகமான மகசூல் விளைச்சல் உழுது இருக்கலாம் எனவும் குற்றம் சாட்டினார்.

பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

VIDEOS

Recommended