• முகப்பு
  • அரசியல்
  • எடப்பாடி கே பழனிசாமிக்கு பா.பென்ஜமின் வெற்றி வீர வாள் வழங்கினார்.

எடப்பாடி கே பழனிசாமிக்கு பா.பென்ஜமின் வெற்றி வீர வாள் வழங்கினார்.

ஆனந்த

UPDATED: Sep 22, 2024, 5:55:50 PM

சென்னை

மதுரவாயல் நொளம்பூரில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி கே.பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் வெள்ளியினால் ஆன  வெற்றி வீர வாளை நினைவு பரிசாக வழங்கினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.சார்பில் மதுரவாயல் நொளம்பூரில் அண்ணாவின் 116 வது  பிறந்த நாள் பொதுக் கூட்டமும், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நேற்று இரவு 6 மணிக்கு நடைபெற்றது.

எடப்பாடி கே பழனிசாமி

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க.பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற பிரதான எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அவருக்கு‌ திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் வெள்ளி வீர வாள் மற்றும் நினைவு கேடயம் பரிசாக வழங்கினார்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி , மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா , வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் , முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் , அமைப்பு செயலாளர்கள் திருத்தணி கோ.ஹரி , திருவேற்காடு பா.சீனிவாசன் ,

அதிமுக

முன்னாள் எம்.பி.கள் டாக்டர் பி.வேணுகோபால் , நேமம் எஸ்.ஜெகந்நாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திருவெற்றியூர் வி.குப்பன் , இரா.மணிமாறன் , மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் வளசை இ.சி.சேகர் , டாக்டர் எம்.ஜி.பிரேம் குமார் , சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் , 

மாவட்ட நிர்வாகிகள் தி.ப.கண்ணன் , கா.சு.ஜனார்த்தனன் , ஆலப்பாக்கம் லயன் இ.அரசு , இன்ஜினியர் ஜெ.துரைராஜ் , க.வைதியநாதன் , ஜி.திருநாவுக்கரசு ,கவுன்சிலர் சத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

 

VIDEOS

Recommended