மாணவ மாணவிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தூக்கு கயிறுடன் சாலை மறியல்.

சக்திவேல்

UPDATED: Mar 6, 2024, 11:57:43 AM

புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போன ஒன்பது வயது மாணவி ஆர்த்தி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநில முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.

Also Read : திமுக கிளை செயலாளருமான தயாளன் என்பவரின் காதை கடித்து தனியாக எடுத்த தந்தை மகன்.

இதன் ஒரு பகுதியாக முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Also Watch : 50 ஆயிரம் நன்கொடை கேட்டு தொல்லை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பல்,

சாலை மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டு மாற்று சாலையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Also Read : புதுச்சேரி மாணவி ஆர்த்தி கொலைக்கு நியாயம் கேட்டு பெண்கள் சட்டமன்றத்தை முற்றுகை.

மேலும் இறந்த மாணவி ஆர்த்திக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Also Read : புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

மேலும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended