ஊடகவியலாளர்களின் கடமையை தடுப்பது மனித உரிமை மீறலாகும்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Feb 25, 2024, 12:47:08 AM

பலாலி, வயாவிளானில் ஊடகப் பணிக்காகச் சென்ற #ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அவர்களின் புகைப்படக் கருவிகளைப் பறித்து, ஒளிப்பதிவுகளை அழித்து அராஜகம் புரிந்த இலங்கைப் படையினரின் அராஜகச் செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் கா. சுகாஸ் தெரிவித்துள்ளார்.

Also Read.நாட்டிற்கான ஒன்றுபட்ட செயற்பாடு ஜனாதிபதியிடம் ஆலோசனை முன்வைப்பு

அவரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பேனா முனையை ஆயுத முனையால் அடக்க முற்படுவது கோழைத்தனத்தினதும் அடக்குமுறை மனோபாவத்தினதும் வெளிப்பாடே,

ஜனநாயகத்தின் நான்காவது தூணென வர்ணிக்கப்படும் ஊடகத்துறை மீதான அடக்குமுறை, இலங்கையில் ஜனநாயகம் என்ற கட்டடம் முற்றாகத் தகர்ந்து விட்டதையே மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

Also Read.அனைத்து உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகும் இத்தருணத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறையானது, சர்வதேசத்திற்குப் பல செய்திகளைப் பட்டவர்த்தனமாக்குகின்றது என்பதை வலியுறுத்துகின்றோம்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் சுயாதீன செயற்பாட்டையும் உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கோருகின்றோம்.

Also Read.மடுவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பு

அச்சுறுத்தப்பட்ட ஊடக உறவுகளுக்கு எமது ஆதரவுக் கரங்களை நீட்டுகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேச்சாளர் க.சுகாஷ்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended