• முகப்பு
  • இந்தியா
  • வாக்களிக்க தகுதி இருந்தும் 18 கோடி பேருக்கு ஓட்டு இல்லை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம் ?

வாக்களிக்க தகுதி இருந்தும் 18 கோடி பேருக்கு ஓட்டு இல்லை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம் ?

கார்மேகம்

UPDATED: Apr 21, 2024, 8:09:42 AM

இந்தியாவில் தகுதி இருந்தும் 18 கோடி‌ பேர் வாக்காளர் பட்டியலில் சேராமல் உள்ளனர் அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்தியாவில் 18 வது நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காக வைத்து தேர்தல் ஆணையம் பணியாற்றுகிறது என தெரிவித்த நிலையில் 19 ந் தேதி நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலில் வெறும் 60 சதவீத வாக்குப் பதிவு மட்டுமே நடந்து‌ உள்ளது

100 சதவீத வாக்குப் பதிவு இலக்கு என்பது வெறும் கானல் நீராக உள்ளது 

100 சதவீத வாக்குப் பதிவு நடைபெறுவதில்லை என்ற கேள்விக்கு நாம் விடை தேடும் முன்பு இந்தியர்களுக்கு வாக்களிப்பதில் முழு வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

ஏனென்றால் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 141 கோடி அதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் தோராயாமாக 115 கோடி இருக்கிறது

இந்த எண்ணிக்கையில் உள்ள அனைவரும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்க வேண்டும் ஆனால் இந்த தேர்தலிலே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் மொத்தம் 97 கோடி பேர் தான் இருக்கிறார்கள் அப்படியென்றால் மீதமுள்ள 18 கோடி பேர் ஏன் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை ? அவர்கள் எங்கே மாயமானார்கள் இதற்கான முழு பொருப்பேற்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான்

ஏனென்றால் வெறும் தேர்தல் நடத்துவது மட்டுமல்ல வாக்காளர் பட்டியல் தயாரிப்பதும் அவர்கள் பணி தான் இந்த முதல் பணியிலேயே தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விட்டது ஒருவர் 18 வயது ஆகிவிட்டாலே அவருக்கு ஓட்டு போடும் உரிமையை தேர்தல் ஆணையம் தானாக வழங்கி விட‌வேண்டும் மாறாக அவர்கள் வந்து விண்ணப்பித்தால் தான் உரிமை தருவோம் என்று சொல்லும் நடைமுறையை முதலில் மாற்றி அமைக்க வேண்டும்

ஆதார் கார்டு, பான்கார்டு போன்று வாக்காளர் அடையாள அட்டையையும் எளிதாக பெறும் நடைமுறைகளை கொண்டுவர வேண்டும் 

தற்போது வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 18 வயது ஆனவுடன் வாக்குச்சாவடி மையம் அல்லது ஆன்லைன் முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்கிறார்கள் ஆனால் இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளன

அதனால் தான் கோடிக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இன்னும் சேர்க்கப் படாமல் உள்ளன வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ந்து விட்டாலும் அதன்பின் முகவரி மாற்றம் போன்றவற்றை செய்வதிலும் மக்கள் மிகப் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

ஆதார் மையங்களில் ஆண்டு முழுவதும் முகவரி மாற்றம் செய்வது போல வாக்காளர் அடையாள அட்டையிலும் முகவரியை ஆண்டு முழுவதும் மாற்றம் செய்வதற்கு சிறப்பு மையங்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்களை ஓட்டு போட வைப்பது எவ்வளவு முக்கியமோ அது போல் தகுதியான 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதும் மிக முக்கியமானது என்பதனை உணர வேண்டும் அதுவரை 100 சதவீதம் வாக்குப் பதிவு என்பது சாத்தியம் இல்லை 

இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் கேட்ட போது ஒருவர் வெளிநாடு செல்வதற்கு  நேரம் ஒதுக்கி பாஸ்போர்ட் வாங்குகிறார் அடயாளத்திற்கு ஆதாரும் வருமான வரி  செலுத்த பான்கார்டும் பெறுகிறார் அதேபோல் நமது ஜனநாயக கடமையை நிறைவு செய்ய வாக்காளர் அட்டையையும் கொஞ்சம் சிரத்தையுடன் பெறவேண்டும் ஓட்டுப்பதிவு நாளன்று அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றார்.

 

  • 3

VIDEOS

Recommended