தாயும் மகளும் ஒரே நேரத்தில் +2 தேர்வெழுதி வெற்றி! 

பரணி

UPDATED: May 15, 2024, 12:45:51 PM

District News

இராணிப்பேட்டை மாவட்டம் - பனப்பாக்கத்தில் தாயும் மகளும் ஒரே நேரத்தில் +2 தேர்வெழுதி வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கதைச் சேர்ந்த டைலர் சுந்தரமூர்த்திக்கு நாகவேனி மனைவி பத்மலோஷினி மகள் உள்ளனர் அதில் மகள் பத்மலோஷினி பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்துவந்து தேர்வில் 600 க்கு 511 மதிப்பெண் பெற்றுள்ளார்.

District News and Updates

அதே பள்ளியில் அவரது தாயார் நாகவேனி கடந்த 2002 ல் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு குடும்ப சுழலாலும், திருமணமாகியதாலும் மேற்கொண்டு படிப்பை தொடரமுடியாமல் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாகவேனி, மகள் மற்றும் கணவனின் முயற்சியால் மீண்டும் படிக்க ஆசைப்பட்டு கடந்த கல்வி ஆண்டில் வீட்டிலிருந்தே பிளஸ் 1 படித்து 372 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

பின்னர் பத்ம லோஷினி +2 வில் தனக்கு பள்ளியில் சொல்லிக் கொடுத்த பாடங்களை தாய்க்கு கற்று தந்து வந்துள்ளார்.

Today District News

அதனை ஆர்வமுடன் படித்து வந்த நாகவேணி அரக்கோணம் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் +2 தனித் தேர்வராக எழுதி 600 க்கு 386 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு இடையே தாயும் மகளும் ஒரே நேரத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது அப்பகுதியில் மகிச்சியுடனான ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended