![](assets/tgi-logo2.jpg)
- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நாகர்கோயிலில் ராஜீவ் காந்தி சிலை உடைந்துள்ளதால் பரபரப்பு
நாகர்கோயிலில் ராஜீவ் காந்தி சிலை உடைந்துள்ளதால் பரபரப்பு
![நாகர்கோயிலில் ராஜீவ் காந்தி சிலை உடைந்துள்ளதால் பரபரப்பு](https://api.thegreatindianews.com/uploads/original/rajiv-gandhi-statue-broken-in-nagercoil.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
முகேஷ்
UPDATED: Jun 18, 2024, 11:36:23 AM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே வெள்ளமடம் சகாயநகர் சந்திப்பு அருகில் அமைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி சிலை உடைந்தும் அருகே உள்ள கடையும் சேதமடைந்திருந்தது
ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதல் கட்ட விசாரணை நடத்தியதில்
நள்ளிரவில் கனரக வாகனம் மோதி இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது எனவும் மேலும் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இடித்த கனரக வாகனம் பற்றி விசாரணைக்குப் பிறகு தெரியவரும் எனவும் தெரிவித்தார்.