• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி

குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி

ஆனந்த்

UPDATED: Aug 25, 2024, 5:29:15 PM

குன்றத்தூர்

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேந்திரன்(26), குன்றத்தூர் அடுத்த எருமையூரில் தங்கி நெடுஞ்சாலை துறையில் சாலை போடும் பணியில் ஒப்பந்த ஊழியராக டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி நர்மதா இவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் உள்ளார்.

அவரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் இன்று இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் எதிர் திசையில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது சென்னை அடுத்த குன்றத்தூர் நோக்கி வேகமாக வந்த காரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்

இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் இறந்து போன ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காரில் வந்தவர்களுக்கு லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார்கள்.

மேலும் விபத்து நடந்த பகுதியில் அவரது உறவினர்கள் சாலை பணியை முடித்துவிட்டு வேனில் வந்த போது இறந்து கிடந்த ராஜேந்திரன் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது

அது மட்டுமின்றி பிரேதத்தை எடுத்து சென்ற வாகனம் திடீரென ஸ்டார்ட் ஆகாததால் அங்கிருந்த போலீசாரும், பொதுமக்களும் ஆம்புலன்சை தள்ளி ஸ்டார்ட் செய்து அனுப்பி வைத்தனர்

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பார்க்க சாலையின் எதிர் திசையில் வேகமாக சென்ற போது நடந்த விபத்தில் டிரைவர் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended