திருச்சி விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் கடத்தல்.

JK

UPDATED: Jul 7, 2024, 5:39:40 PM

Latest Trichy District News

இன்று ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தது. 

அதில் வந்த பயணிகள் உடைமைகள் மற்றும் ஆவணங்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

District News Headlines in Tamil

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஆண் பயணியை அதிகாரிகள் அழைத்து சென்று சோதனை செய்தனர். 

அப்போது அவரது மலக்குடலில் பேஸ்ட் வடிவில் 718 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்ததையும், 95 கிராம் தங்கம் சங்கிலி வடிவில் மறைத்து வைத்திருந்ததையும் கண்டறிந்தனர்.

District News & Updates in Tamil

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.54 லட்சத்து 36 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended