• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூர் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு மக்கள் அவதி 

திருவள்ளூர் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு மக்கள் அவதி 

ராஜ்குமார்

UPDATED: Jul 8, 2024, 11:00:40 AM

Latest Thiruvallur News

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பாச்சூர் கிராமத்தைச் சார்ந்த மக்கள் 100 நாள் வேலை வழங்கக்கோரி சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு வேலை வேண்டும் வேலை வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள் இதனால் திருப்பதிக்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக முடக்கப்பட்டது.

Tiruvallur News

மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன இதனால் வாகனங்கள் இருபுறமும் செல்லாது நிலை ஏற்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு விரைவில் வேலை வழங்கப்படும் என்றும் இதுகுறித்து விரைவில் உங்கள் பஞ்சாயத்தில் பேசப்பட்டு உங்களுக்கு வேலை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Thiruvallur News Today Tamil

உடனடியாக காவலர்கள் உங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சாலையில் இருந்து கலைந்து சென்றனர் இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது 

இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

 

VIDEOS

Recommended