ஆற்காடு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்.

பரணி

UPDATED: Jul 26, 2024, 1:22:47 PM

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு 

அடுத்த கிருஷ்ணாவரம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (25) இவருக்கும் ஆற்காடு தாலுகா கரிகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லாவண்யா(19)ஆகிய இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு நிச்சியதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் இருவருக்கும் திருமணத்திற்கு முன்னரே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினேஷ் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி இரத்தினகிரி கோயிலில் திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளனர்.

ஆற்காடு அரசு மருத்துமனை

ஆனால் மணமகன் தினேஷ் திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால் புதன் கிழமை இரவு தனது வீட்டில் இருந்த எறும்பு மருந்து, மாத்திரைகளை கரைத்துகுடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Latest Ranipet District News

இந்நிலையில் மணமகன் மற்றும் அவரின் பெற்றோர் சம்மதத்துடன் ஆற்காடு அரசுமருத்துவமனை வளாகத்தில், சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் தினேஷ் மற்றும் லாவன்யா திருமணம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து தினேஷ்யை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மனைவியுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended