திமுக பிரமுகர் நரேஷ் கள்ள சந்தையில் மது விற்பனை செய்யும் வீடியோவால் சிக்கினார்.

நெல்சன் கென்னடி

UPDATED: May 18, 2024, 10:25:51 AM

சென்னை ராயபுரம் 49 வது வார்டு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் நரேஷ் இவர் கடந்த மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்ற போது 49 வது வார்டில் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முறைகேடாக ஓட்டு போட்டதாக அங்கிருந்த அதிமுகவினர் குற்றம் சாட்டினர். 

இந்நிலையில் சட்ட விரோதமாக கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவை சேர்ந்த நரேஷ் என்ற நபரை அதிமுகவினர் சிறை பிடித்தனர்.

நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் சிறைபிடிக்கப்பட்ட நபரை சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக அழைத்து வந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் திமுக பிரமுகரான நரேஷ் ராயபுரம் பகுதியில் மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் இடுப்பில் இரண்டு பாட்டில்களை சொருகி வைத்து விற்பனை செய்கிறார் மேலும் அவர் பயன்படுத்தும் ஆக்டிவா வாகனத்திலும் மதுபானங்களை வைத்து விற்பனை செய்து வருகின்றார்.

இப்போது இந்த வீடியோ வட சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வைரலாக பரவி வருகிறது. மேலும் போலீசார் இவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா? கட்சியில் இவரை பதவியில் இருந்து நீக்குவார்களா?என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்றனர்.

 

VIDEOS

Recommended