• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உத்திரமேரூர் அருகே அம்மா பூங்காவை அரசு முறையாக பராமரிக்காதால் பூங்காவில் இருந்த உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மாயம்.

உத்திரமேரூர் அருகே அம்மா பூங்காவை அரசு முறையாக பராமரிக்காதால் பூங்காவில் இருந்த உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மாயம்.

லட்சுமி காந்த்

UPDATED: May 24, 2024, 1:00:03 PM

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புலிவனம் கிராமத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.

இந்த அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அரசு முறையாக பராமரிக்காததால் உடற்பயிற்சி கூடத்தில் இருந்த உடற்பயிற்சி கருவிகள் மற்றும் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் பல மாயமாகி உள்ளது.

அதேபோல், பூங்கா குடிமகன்களின் கூடாரமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இந்த பூங்காவை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.

எனவே, அம்மா பூங்காவை அரசு உடனே சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended