வாலாஜாபாத் அருகே மூதாட்டியை  கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை

லட்சுமி காந்த்

UPDATED: May 28, 2024, 10:34:50 AM

District news 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் ஊராட்சியில் சுகுணா வயது 65 என்பவர் தன்னுடைய சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்கள். 

சுகுணா வீட்டின் மாடியில் வட மாநிலத்தவர் வாடகைக்கு தங்கி வருகின்றார்கள். சுகுணாவின் வீடு அருகே கிராம நிர்வாக அலுவலகம், நியாய விலை கடை , அங்கன்வாடி பள்ளி உள்ளிட்டவைகள் உள்ளது. சுகுணாவின் வீட்டை சுற்றிலும் காம்பவுணட் சுவர் போடப்பட்டு மிகவும் பாதுகாப்பான இடத்தில் உள்ளார்.

Kancheepuram Today News

அதுமட்டுமின்றி அந்த பகுதியில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருந்து இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுகுணாவின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் , சுகுணாவை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சுமார் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள செயின் , வளையல் உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் காவல் துறையினர் கொலையுண்ட சுகுணாவின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை பற்றி தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் சுகுணாவின் வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்கி உள்ள வட மாநில நபர்களை சந்தேகத்தின் பெயரில் வாலாஜாபாத் காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகிறார்கள்.

 

VIDEOS

Recommended