கோழிப் பண்ணையில் தீ விபத்து.

அஜித்குமார்

UPDATED: Jun 18, 2024, 9:24:39 AM

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த நாரையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவா், வேட்டவலம்-நாரையூா் சாலையில் கோழிப்பண்ணை வைத்துள்ளாா்.

நேற்று முன்தினம் இரவு 6மணி அளவில் கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு அருண்குமாா் வீட்டுக்குச் சென்றாா். இரவு சுமாா் 7. 30 மணிக்கு கோழிப் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதுகுறித்து வேட்டவலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். நிலைய அலுவலா் ரகுபதி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் பழனிச்சாமி, ஜெயராஜ், தமிழரசன், சண்முகம், தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த சுமாா் 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் எரிந்து சாம்பலாகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு மீட்புத் துறையினா் தெரிவித்தனா்.

 

VIDEOS

Recommended