குமரியில் மேலும் ஒரு துயர சம்பவம் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

முகேஷ்

UPDATED: May 6, 2024, 6:30:51 PM

குமரி மாவட்டத்தில் இன்று காலை 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு துயர சம்பவமாக கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் உள்ள பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி, சுபின் வர்கீஸ் (19) என்ற இளைஞர் உயிரிழப்பு.

கோவையில் பொறியியல் படித்து வரும் இவர், விடுமுறைக்காக பூர்வீக கிராமத்திற்கு வந்த நிலையில், இன்று ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். 

அங்கு இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது  சடலத்தைக் கைப்பற்றிய திருவட்டார் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை.

 

  • 1

VIDEOS

Recommended