தினம் ஒரு திருக்குறள் 30-05-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: May 29, 2024, 6:28:59 PM

குறள் 155:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

மு.வரதராசன் விளக்கம்:

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

கலைஞர் விளக்கம்:

தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

English Couplet 155:

Who wreak their wrath as worthless are despised;

Who patiently forbear as gold are prized.

Couplet Explanation:

(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.

Transliteration(Tamil to English):

oRuththaarai ondraaka vaiyaarae vaippar

poRuththaaraip ponpoaR podhindhu

VIDEOS

Recommended