தினம் ஒரு திருக்குறள் 01-09-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Aug 31, 2024, 6:50:11 PM

குறள் 214:

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

மு.வரதராசன் விளக்கம்:

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

கலைஞர் விளக்கம்:

ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

English Couplet 214:

Who knows what's human life's befitting grace,

He lives; the rest 'mongst dead men have their place.

Couplet Explanation:

He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.

Transliteration(Tamil to English):

oththa thaRavoan uyirvaazhvaan matraiyaan

seththaaruL vaikkap padum

VIDEOS

Recommended