1250 கிராம் கஞ்சா, 140 போதை மாத்திரைகள்‌ பறிமுதல் இளைஞன் கைது.

ஆனந்த்

UPDATED: Aug 27, 2024, 6:35:46 PM

பூந்தமல்லி

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலில் குமணன் சாவடியில் இருந்து வேலப்பன்சாவடி செல்லும் சாலையில் கோபரச நல்லூர் என்ற இடத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்க்கப்படுவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் கோபரச நல்லூர் என்ற இடத்தில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது , ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

Latest Crime News

விசாரணையில் அருகில் உள்ள புலியம்பேடு குளக்கரை 3 வது தெருவைச் சேர்ந்த ஜெயசிம்மா (வயது 22) என்று தெரிந்தது.

மேலும் அவரிடம் சோதனை செய்த போது , 1250 கிராம் கஞ்சா பொட்டலங்கள்‌, 140 போதை மாத்திரைகள் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் அவரை கைது செய்தனர்.

கஞ்சா

இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட வாலிபரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

  • 1

VIDEOS

Recommended