• முகப்பு
  • குற்றம்
  • வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே சர்வசாதாரணமாக நகையை திருடி விட்டு தப்பிக்க முயன்ற மூதாட்டியை மடக்கி பிடித்த பெண்கள்.

வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே சர்வசாதாரணமாக நகையை திருடி விட்டு தப்பிக்க முயன்ற மூதாட்டியை மடக்கி பிடித்த பெண்கள்.

ஆனந்த்

UPDATED: Sep 6, 2024, 2:54:44 PM

சென்னை 

மாங்காடு, காமாட்சி அம்மன் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று பெண் ஒருவர் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது அவரது வீட்டின் பெட்ரூமில் இருந்து மூதாட்டி ஒருவர் வெளியே சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

இது குறித்து கேட்டபோது வீடு மாறி வந்து விட்டதாக கூறி அந்த மூதாட்டி வேக வேகமாக சென்றதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அந்த மூதாட்டியை மடக்கி பிடித்த போது அவரை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்ற போது கூச்சல் போட்டதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்த மூதாட்டி மடக்கி பிடித்த போது அவரது கையில் வீட்டில் இருந்து திருடப்பட்ட நான்கு பவுன் நகைகள் மற்றும் சில்லறை காசுகள் ஒரு பையில் போட்டிருந்ததும் கையில் ஒரு பைபிள் இருந்ததும் தெரிய வந்தது

Breaking News in Tamil 

இதையடுத்து அந்த மூதாட்டி நேரடியாக வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து நகையை திருடிக்கொண்டு சென்றதும் தெரிய வந்தது 

மேலும் அவர் வைத்திருந்த பைபிளில் எந்தெந்த வீட்டில் சென்று திருட வேண்டும் என அந்த பகுதியில் உள்ள வீடுகளில் முகவரியோடு துண்டு சீட்டில் எழுதி இருந்தது தெரியவந்தது பொதுமக்கள் மடக்கி பிடித்ததை அடுத்து மூதாட்டி மயங்கி விழுந்தது போல் நடித்ததை அடுத்து பொதுமக்கள் அந்த மூதாட்டியை பிடித்து மாங்காடு போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Crime News 

மேலும் அந்த மூதாட்டி வரும் வழியில் எல்லாம் ஒவ்வொரு வீடாக நுழைந்து ஆட்கள் இருக்கும் போது அவர்களது வீடுகளில் சென்று பீரோவை திறந்து நகை பணம் ஆகியவற்றை திருடி வந்தது தெரிய வந்தது 

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வர முடியாமல் கதவு உள் பக்கமாக சாத்திக் கொண்டதால் ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டு பெண்ணை கதவை திறக்க சொல்லி அங்கிருந்து வந்தது தெரிய வந்தது

Latest Chennai District News 

அந்த பகுதியில் நன்கு அறிமுகமான பெண் போல் இவர் சுற்றி வந்து ஒவ்வொரு வீடாக ஆட்கள் இருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது 

தொடர்ந்து இந்த பெண் யார் இவரது பின்னணியில் வேறு யாரெல்லாம் உள்ளார்கள் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended