பானை சின்னத்தில் வாக்களிக்காததால் பெண் கொலை.

சண்முகம்

UPDATED: Apr 20, 2024, 11:43:37 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்ரிமாணியம் கிராமத்தைச் சார்ந்த கோமதி கணவர் ஜெயக்குமார் இவர் நேற்று மக்களவைத் தேர்தலில் தண்டக்கார குப்பம் கிராமத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்துள்ளார்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அருள், அறிவு, மணி, பாண்டியன், ரவி, ராஜா, கலைமணி, தர்மராஜ் இவர்கள் நீ ஏன் தாமரை சின்னத்தில் வாக்களித்தாய் பானை சின்னத்தில் ஏன் வாக்களிக்கவில்லை என கடும் கோபத்தில் இருந்த ஏழு பேரும் கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்

இதில் நிலைகுலைந்து போன கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் ராபின் சன் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக விருத்தாச்சலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

இதில் திமுக பிரமுகர் 7 நபர் மீது வழக்கு பதிவு செய்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்

இந்நிலையில் தற்காலிகமாக மூன்று பெண்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது திமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

  • 3

VIDEOS

Recommended