சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு கொள்ளையண்கள்.

S.முருகன்

UPDATED: Aug 7, 2024, 12:42:50 PM

திருவேற்காடு

அம்பத்தூர் எஸ்டேட்டை சேர்ந்த பாலமுருகன் (21) அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்

நேற்று முன்தினம் 05.08.24 இரவு 08.00 மணிக்கு வேலை முடித்துவிட்டு கம்பெனியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லும் போது பின் பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பாலமுருகன் செல்போனை பறித்து சென்றனர்.

Latest Chennai Crime News

இது சம்பந்தமாக பாலமுருகன் கொடுத்த புகாரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பன்னீர் செல்வம் வழக்கு பதிவு செய்து கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த கார்த்திக் (20) மற்றும் மதுரவாயல் பிள்ளையார் கோவில் தேர்ந்த முகேஷ் (20)ஆகிய இருவரை நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended