• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி காவல்துறை எஸ்.பி.படத்துடன் மிரட்டல் விடுக்கும் வாசகங்களை இணைத்து பதிவேற்றம் செய்த வாலிபர்

திருச்சி காவல்துறை எஸ்.பி.படத்துடன் மிரட்டல் விடுக்கும் வாசகங்களை இணைத்து பதிவேற்றம் செய்த வாலிபர்

JK

UPDATED: Jul 30, 2024, 7:57:47 PM

திருச்சி 

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரெளடி துரை என்கிற துரைசாமி புதுக்கோட்டை அருகே காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டு உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரது ஆதரவாளா்கள் சமூக வலைதளங்களில், திருச்சி எஸ்.பி. படத்துடன் மிரட்டல் விடுக்கும் வாசகங்களை இணைத்து பதிவேற்றம் செய்தனா்.

TRICHY CRIME NEWS

இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை ஈடுபட்டனர். விசாரணையில் புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ராஜபாண்டி(21) என்ற இளைஞா் அதை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜபாண்டியை காவல்துறையினர் தேடி வந்தனர்.

Live updates Tamil

இந்நிலையில் திருச்சி குழுமணி சாலையில் ராமநாதநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போது அவா் பட்டாக் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சோமரசம்பேட்டை காவல்துறையினர் அவர் மீது 4பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Latest Tamil Crime News

பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளனா். 

 

VIDEOS

Recommended