• முகப்பு
  • குற்றம்
  • இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இராஜபாளையம் அருகே மது விற்ப்பனை படுஜோராக நடை பெற்றது.

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இராஜபாளையம் அருகே மது விற்ப்பனை படுஜோராக நடை பெற்றது.

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 2, 2024, 1:43:06 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் தளவாய்புரம் ஊரின் நுழைவுப் பகுதிஅருகே 11943 என்கிற எண் கொண்ட அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடை அருகே வேலி முள் காட்டிற்குள் சட்டவிரோத மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தகவல் அறிந்து இப்பகுதிக்கு சென்ற செய்தியாளர்கள் வருவதை கண்டு மது பாட்டில்களை எடுத்து வைத்துக்கொண்டு தப்பி ஓட முடியாமல் திரு திரு வென்று முழித்து நின்றதால் விற்ப்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என தெளிவாக தெரிகிறது 

காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி அன்று மட்டுமல்ல 24 மணி நேரமும் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது மேலும் இப்பகுதிகளில் மதுவிலக்கு , மற்றும், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் முறையாக செயல்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

VIDEOS

Recommended