• முகப்பு
  • குற்றம்
  • கலவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 லட்சம் மதிப்பில் உள்ள தங்க நகைகள் திருட்டு.

கலவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 லட்சம் மதிப்பில் உள்ள தங்க நகைகள் திருட்டு.

பரணி

UPDATED: Sep 25, 2024, 7:07:05 PM

இராணிப்பேட்டை மாவட்டம்

கலவை பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இரும்பேடு பகுதியைச் சேர்ந்த பாபா (24) இராணிப்பேட்டை பாலாறு மேம்பாலம் அருகே குடிசை போட்டு வசித்து வரும் ஏழுமலை (40) இவரது மகன் சக்திவேல் (19) ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கலவை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் இந்த மூன்று பேரும் ஆற்காடு பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது இவர்களை ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

குற்றம் நியூஸ் அப்டேட்ஸ் 

அந்த விசாரணையில் கடந்த மே மாதம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த இதயத்துல்லா, ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரின் வீடுகளில் யாரும் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த செயின் மோதிரம் கம்மல் உள்ளிட்ட 22 சவரன் தங்க நகைகள் திருடியது தெரியவந்தது. 

மேலும் திருடப்பட்ட நகைகளை ஏழுமலை வசித்து வந்த ஆற்காடு பாலாற்றின் மேம்பாலத்தின் அடியில் குடிசையின் அருகில் மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. நகைகளை மீட்ட போலீசார் விசாரணைக்கு பின்னர் மூன்று பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended