• முகப்பு
  • குற்றம்
  • காட்டுப்பாக்கத்தில் இறக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சிலிண்டர்களை சர்வ சாதாரணமாக திருடி சென்ற திருடன்.

காட்டுப்பாக்கத்தில் இறக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சிலிண்டர்களை சர்வ சாதாரணமாக திருடி சென்ற திருடன்.

S.முருகன்

UPDATED: Sep 4, 2024, 7:08:52 PM

Latest Crime News 

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் விரிவு 1 பகுதியில் அங்குள்ள குடியிருப்புகளுக்கு சமையல் சிலிண்டர்கள் விநியோகம் செய்வதற்காக தினமும் இறக்கி வைக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்கும் சப்ளை செய்யப்படுவது வழக்கம் 

இந்த பணியில் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், பாலு ஆகிய இரண்டு ஊழியர்கள் இந்த்ந் பனியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இறக்கி வைக்கப்பட்ட சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு சப்ளை செய்துவிட்டு வந்தபோது திடீரென இரண்டு சிலிண்டர்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

BREAKING NEWS IN TAMIL 

இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மொபெட்டில் வந்த வாலிபர்கள் இரண்டு பேர் சர்வ சாதாரணமாக 2 சிலிண்டர்களை எடுத்து வைத்துக்கொண்டு சாவகாசமாக செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் 

இதுவரை இந்த பகுதியில் இது போன்ற சிலிண்டர் திருட்டு நடந்ததில்லை எனவும் தற்போது இரண்டு வாலிபர்கள் சிலிண்டர்களை தேடிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது

Latest District News in Tamil 

இது குறித்து பூந்தமல்லி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சர்வ சாதாரணமாக பட்டப்பகலில் மொபெட்டில் வந்த இரண்டு பேர் இரண்டு சிலிண்டர்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

VIDEOS

Recommended