• முகப்பு
  • குற்றம்
  • கும்மிடிப்பூண்டியில் உள்ள இருவேறு காவல் நிலைய எல்லையில் அமைந்திருக்கும் திருக்கோவில்களில் 11 கோபுர கலசங்கள் திருட்டு.

கும்மிடிப்பூண்டியில் உள்ள இருவேறு காவல் நிலைய எல்லையில் அமைந்திருக்கும் திருக்கோவில்களில் 11 கோபுர கலசங்கள் திருட்டு.

L.குமார்

UPDATED: Jul 18, 2024, 7:22:33 PM

திருவள்ளூர் மாவட்டம் 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செகண்யம் ஊராட்சி கங்கானிமேடு கிராமத்தில் அமைந்துள்ள கங்கையம்மன் கோவிலின் 4 கோபுர கலசங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் 

மேலும் அதே பகுதியில் அமைந்துள்ள கங்காதீஷ்வரன் கோவிலில் ஒரு ஒரு கோபுர கலசத்தையும், அதைத்தொடர்ந்து கங்காதீஸ்வரன் கோவிலில் அருகாம்பையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலில் கோபுர கலசத்தை திருட முயற்சித்த மர்ம நபர்கள் முயற்சி தோல்வி அடைந்ததால் கோபுர கலசத்தை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

ஏழு கலசங்கள் திருட்டு

சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேபோல் கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐயர் கண்டிகை பகுதியில் அமைந்துள்ள அவிநாசி அப்பர் சிவன் கோவிலில் உள்ள ஏழு கலசங்கள் திருடப்பட்டுள்ளது.

Latest Thiruvallur District News

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended