• முகப்பு
  • குற்றம்
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்தவனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்தவனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

லட்சுமி காந்த்

UPDATED: May 27, 2024, 11:01:13 AM

Tamil News Publishers

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி கிராமத்தில் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயற்சித்த மூன்று வாலிபர்களை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். 

அப்பொழுது மூவரும் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்திலேயே வேகமாக சென்றுள்ளனர். 

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கொள்ளையர்களை பின் தொடர்ந்து உள்ளனர்.

Online Tamil News

அதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் தண்டலம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென இருசக்கர வாகனத்தில் டயர் பஞ்சர் ஆகி கீழே விழுந்துள்ளனர்.

உடனே மூவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையில் ஒருவர் மட்டும் வசமாக மாட்டிக் கொண்டார்.

பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் மாட்டிக்கொண்ட கொள்ளையனுக்கு தர்ம அடி உதை கொடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர். 

போலீசார் கொள்ளையனை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை மேற்கொண்டதில், மூன்று பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது மாட்டிக்கொண்ட கொள்ளையனின் பெயர் ஹரிஷ் (18) என்றும் கஞ்சா போதையில் உள்ளார் என்றும் தெரியவந்த நிலையில் தற்போது போலீசார் ஹரிசை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா போதையில் இளைஞர்கள் கத்தியுடன் சென்று பல விதமான குற்ற செயல்களில் ஈடுபடவதை காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை என்பதும் இதுபோன்ற சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended