• முகப்பு
  • குற்றம்
  • கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை கொள்ளை நள்ளிரவில் நடந்த பயங்கரம்.

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை கொள்ளை நள்ளிரவில் நடந்த பயங்கரம்.

சண்முகம்

UPDATED: Aug 9, 2024, 6:36:02 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்

அருகே சாவடிக்குப்பம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பெரியநாயக சாமி என்பவர் வசித்து வருகிறார்.

இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 07-08-2024 அன்று நள்ளிரவில் வீட்டில் உள்ளே புகுந்த மர்மநபர்கள் கத்தியை அவரது கழுத்தில் வைத்து மிரட்டி பீரோவின் சாவியை கேட்டுள்ளனர் அவர் உயிர் பயத்தில் சாவியை தந்துள்ளார்.

இந்நிலையில் சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த நகையை எடுத்துச் சென்றுள்ளனர்.

Latest Crime News

இதுகுறித்து கதறிய பெரியநாயகி சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல்துறை ஆய்வாளர் வீரசேகரனிடம் தகவல் அளித்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியநாயக சாமியின் வீட்டில் இருந்த பீரோவில் அவரது பெண்ணின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த சுமார் எட்டு பவுன் நகை இருந்ததாக கூறப்படும் நிலையில் மர்ம நபர்கள் பீரோவைத் திறந்து அவர்களுடைய கைகளில் அகப்பட்ட சுமார் 12 கிராம் நகையை மட்டும் எடுத்துச் சென்றதாக பாதிக்கப்பட்டவர் தரப்பில் கூறப்படுகிறது.

நகைகள் கொள்ளை

மீதமுள்ள நகைகள் பத்திரமாக இருப்பதாக பெரியநாயகத்தின் மனைவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

அதிக குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வீட்டில் மர்மநபர்கள் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி நகையை எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

VIDEOS

Recommended