• முகப்பு
  • குற்றம்
  • கட்டிட தொழிலாளியை தந்தை மகன்கள் சேர்ந்து கொலை செய்த கொடூர சம்பவம்.

கட்டிட தொழிலாளியை தந்தை மகன்கள் சேர்ந்து கொலை செய்த கொடூர சம்பவம்.

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 19, 2024, 10:28:40 AM

சிவகாசி

நாரணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜசேகர் ( வயது 40). கட்டிட தொழிலாளியான இவருக்கும் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 38) என்பவருக்கும் திருமணமாகி,6- வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளார். 

கணவன்- மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் ராஜசேகரை பிரிந்த மாரியம்மாள் தனது மகனுடன் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

ராஜசேகர் வீட்டின் பக்கத்து தெருவான முஸ்லிம் தெருவில் குடியிருக்கும் வைரப்பிரகாஷ் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

Latest Crime News In Tamil

அப்போது வைர பிரகாஷ் ராஜசேகரின் பிரிந்து சென்ற மனைவியை கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் வைர பிரகாசை அடித்து சட்டையை கிளித்துள்ளார். 

அப்படியே வீட்டிற்கு சென்ற வைர பிரகாசை கண்ட அவரது தந்தை விநாயகமூர்த்தி (வயது 48 ) மற்றும் சகோதரர் விக்ரமன்(வயது 24 )அதிர்ச்சியில் உறைந்தனர்.

தனது மகனை தாக்கியவரை சும்மா விட கூடாது என நினைத்து விநாயக மூர்த்தி தன் இரு மகனையும் கத்தி அறிவாளுடன் அழைத்து சென்று வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த ராஜசேகரை  தந்தை மகன்கள் 3 பேரும் சேர்ந்து கத்தி, அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை

கொலை செய்த மூவரும் காரில் தப்பி ஓட முயன்றபோது மதுரை மாவட்ட எல்லை பகுதியான கே.உசிலம்பட்டி பகுதியில் வைத்து 3 பேரையும் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended