• முகப்பு
  • குற்றம்
  • அதிமுக வர்த்தக அணி மாநிலச் செயலாளர் சஜீவன் மற்றும் 5 பேர் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வழக்கு பதிவு.

அதிமுக வர்த்தக அணி மாநிலச் செயலாளர் சஜீவன் மற்றும் 5 பேர் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வழக்கு பதிவு.

அச்சுதன்

UPDATED: Apr 23, 2024, 8:23:20 AM

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும்.

இங்குள்ள வனப்பகுதிகளில் இந்தியாவிலேயே அதிகமான புலிகள், யானைகள், காட்டெருமைகள், சிறுத்தை புலி, கரடி, அரியவகை சிங்கவால் குரங்கு ,நட்சத்திர ஆமைகள் , மான் இனங்கள் உட்பட தாவர உன்னிகள், மாமிச உண்ணிகள், அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட சில்வர் கிளவுட் தோட்டத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதாக அதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளரும்,

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனில் மற்றும் சிபி அவர்களின் அண்ணனாக உள்ள சஜீவனுக்கு சொந்தமான குடியிருப்பில் பதுக்கி வைத்துள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் வனத்துறையினர் அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவனின் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறையினர் சோதனை நடத்திய போது வீட்டில் வாசலில் புதைத்து வைக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும் சஜீவன் தங்கு மறையில் மேலும் ஒரு துப்பாக்கி, 11 என்ற எண்ணிக்கை கொண்ட தோட்டாக்கள், கத்திகள், ரத்தக்கரை படிந்த கோடாரி, டார்ச் லைட்டுகள் மற்றும் காற்று சுழல் துப்பாக்கி ஒன்று வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவனின் எஸ்டேட் மேலாளரை விசாரணை நடத்திய போது சஜீவன் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் சுப்பையா மற்றும் அவரது நண்பர்கள் துப்பாக்கியுடன் எஸ்டர்ட்க்கு வந்து வேட்டையாடுவது வழக்கம் என வாக்குமூலம் அளித்ததன் பேரில் வனத்துறையினர் குற்றச் செயலில் ஈடுபட்ட பைசல், சாபுஜாக்கோப், பரமன், ஸ்ரீகுமார், சுபைர் ,அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதை அறிந்த எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளருமான சஜீவன் உட்பட மூன்று பேர் தலைமறைவு ஆகிய நிலையில் பைசல் , சாகுஜேக்கப் ,பரமன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் வனத்துறையினர் ஆஜர் படுத்தினர்.

முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் உட்பட மேலும் இதுவரை வனத்துறையினர் தனிக்குழு அமைத்து தேடி வருகின்றனர். சஜீவன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

  • 3

VIDEOS

Recommended