• முகப்பு
  • குற்றம்
  • திமுக பிரமுகர் வீட்டுமனைகளை விற்பனை செய்து கிரையம் செய்யாமல் ஏமாற்றுவதாக புகார்.

திமுக பிரமுகர் வீட்டுமனைகளை விற்பனை செய்து கிரையம் செய்யாமல் ஏமாற்றுவதாக புகார்.

செல்வம்

UPDATED: Apr 18, 2024, 9:45:16 AM

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவர் திருப்பூர் மாவட்டம் பொங்கு பாளையம் கிராமத்தில் விஜய கார்டன் என பெயரிட்டு வீட்டு மனை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளார்

விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் வீட்டு மனைகள் வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதற்காக முன் தொகையும் செலுத்தியுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பிரிவுக்காக பணம் பெற்ற ஆனந்தன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வீட்டுமனையை கிரையும் செய்து கொடுக்காமல் இழுத்து வருவதாக தெரிகிறது

இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு

தாங்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தங்களது மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட எஸ்பி இடம் தனித்தனியாக மனு அளித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது ஏராளமான மக்களிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தை கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்தனர்.

 

  • 5

VIDEOS

Recommended