நெமிலி சுற்றுவட்டார பகுதியில் மண் திருட்டு.

பரணி

UPDATED: Apr 29, 2024, 8:28:10 PM

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை சுற்றியுள்ள கீழ்வெங்கட்டாபுரம் ரெட்டிவலம் வேட்டாங்குளம் பள்ளூர் ஆட்டுப்பாக்கம் அசநெல்லிக்குப்பம் சயனாபுரம் கணபதிபுரம் சேந்தமங்கலம் கீழ்வெண்பாக்கம் திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளில்

ஏரி குளம் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றிலிருந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் லாரி டிராக்டர்களில் தினமும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது 

இந்த மண் திருட்டை தடுக்க விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் வருவாய்துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை

தொடர்ந்து நடைபெறும் மண் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

  • 1

VIDEOS

Recommended