கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை.

ராஜ்குமார்

UPDATED: Aug 27, 2024, 9:09:44 AM

கோவை 

கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கீரணத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது

கஞ்சா சாக்லேட்

கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்து இருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1,14,400/- மதிப்பு உள்ள சுமார் 34 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended