• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து கடத்தி வந்த ரூ 70 லட்சம் தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து கடத்தி வந்த ரூ 70 லட்சம் தங்கம்

JK

UPDATED: Apr 28, 2024, 1:23:47 PM

துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் வந்தது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை, ஆவணங்களையும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை அழைத்து சோதனை மேற்கொண்ட போது அந்த நபர் தனது உடலில் மலக்குடலில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 70 லட்சத்தி 58 ஆயிரத்து 825 மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் கடத்தி வந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended