மளிகை கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள்.

சண்முகம்

UPDATED: Sep 6, 2024, 7:04:13 PM

சிதம்பரம்

சிதம்பரம் தில்லைநகர் வீனஸ் பள்ளி அருகில் உள்ள மளிகை கடைக்கு கடந்த செப்.3-ம் தேதி அன்று சிதம்பரம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் ராகுல் மற்றும் சுரேந்திரன் மகன் கௌஷிக் உள்ளிட்டோர் சென்று அரிவாளை காட்டி தகராறு செய்து செய்து உன் கடையை பெட்ரோல் ஊற்றி பிலாஸ்ட் செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியதாக தெரிய வருகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Breaking News in Tamil 

இதனை அடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் உத்தரவின் பேரில், சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மேற்பார்வையிட்டு சிதம்பர நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ராகுல் (28), கந்தமங்கலம் செல்லுதுரை மகன் மூவேந்தன் (22), பழனைய புவனகிரி ரோட்டைச் சேர்ந்த சுரேந்திர் மகன் கெளஷிக் (23), மீதிகுடியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் தேவராஜ் (17) ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Latest Crime News in Tamil

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் மகன் கௌஷிக் (23) என்ற வாலிபரை வியாழக்கிழமை இரவு சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். மேலும் தலைவராக உள்ள ராகுல் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Latest Cuddalore News

குறிப்பு ராகுல் மீது ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளது அடிதடி கஞ்சா போன்ற வழக்குகள் உள்ளன இவர் தாய் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் இவரை கைது செய்தால் மார்க் கம்யூனிஸ்ட் கட்சி இவரை கைது செய்தால் இவரது தாய் காவல் நிலையத்தில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது.

 

VIDEOS

Recommended