ராணிப்பேட்டையில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தல்.

பரணி

UPDATED: Apr 26, 2024, 8:10:05 PM

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்

பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை நுகர்வு பொருள் ஒப்படைத்தார் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் மின்சார ரயில் அரக்கோணத்தில் இருந்து கடப்பா செல்லும் மின்சார ரயில்களில் ரேஷன் அரிசியை அதிக அளவில் கடத்துவதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதிக்கு தொடர்ந்து புகார் சென்றது.

அதை தொடர்ந்து மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் நடராஜன் ஆந்திர மாநிலம் செல்லும் ரயிலில் திடீர் சோதனை நடத்தினர்

அப்போது ரயிலில் சீட்டுக்கு கீழ் பதுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தார்

இந்த அரிசி மூட்டைகளை அரக்கோணம் அம்மனூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வனிவுக் கழக உடனில் ஒப்படைத்தார்

அதேநேரம் அரிசி மூட்டை கடத்தி அவர்கள் பறக்கும் படை வட்டாட்சியரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

 

VIDEOS

Recommended