• முகப்பு
  • குற்றம்
  • தனியார் பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம்.

தனியார் பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம்.

ரமேஷ்

UPDATED: Aug 26, 2024, 12:52:38 PM

கும்பகோணம் 

கும்பகோணம் அருகே தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலை அம்மாபேட்டை பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பங்கில் இன்று காலை வாடிக்கையாளர்கள் பெட்ரோல் போட்டு விட்டுச் சிறிது தூரம் சென்ற நிலையில் வாகனங்கள் பழுதாகி நின்றுள்ளது.

இதனால் வாகனத்தில் இருக்கக்கூடிய பெட்ரோலை குழாய் மூலம் எடுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீரும் கலந்திருப்பதை பார்த்து வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த பெட்ரோல் பங்கிற்கு திரும்பி வந்து பிளாஸ்டிக் கேனில் பெட்ரோலை வாங்கி தண்ணீர் கலந்து வருவதை பங்க் ஊழியர்களிடம் காண்பித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் கலப்படம்

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலயறிந்து காலை முதல் அந்த பங்கில் பெட்ரோல் நிரப்பிச் சென்று பழுதடைந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர். 

பெட்ரோல் டேங்கிற்குள் நிலத்தடி நீர் உட்புகுந்திருக்கலாம் அதன் காரணமாக பெட்ரோலில் தண்ணீர் கடந்திருக்கக்கூடும், வேண்டுமென்றே பெட்ரோலுடன் தண்ணீர் கலக்கவில்லை என பெட்ரோல் பங்க் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்த போதிலும், அவர்கள் பெட்ரோலுக்கான பணத்தையும், பழுது அடைந்த வாகனத்தை சீர் செய்வதற்கான பணத்தையும் கொடுக்க வேண்டுமென கேட்டு வாக்குவாதம் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பெட்ரோல் பங்க் 

மேலும், பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர் கலப்பதை ஆய்வு செய்து சரி செய்த பிறகு பெட்ரோல் பங்கை திறக்க வேண்டுமென ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுவாமிமலை காவல்துறையினர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended