![](assets/tgi-logo2.jpg)
தேனி மாவட்டம் வருசநாடு அருகே 22 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது தப்பி ஓடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
![தேனி மாவட்டம் வருசநாடு அருகே 22 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது தப்பி ஓடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.](https://api.thegreatindianews.com/uploads/original/ganja-sales.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
இரா.இராஜா
UPDATED: Jun 30, 2024, 4:54:53 PM
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து தேனி மாவட்டம் வருசநாடு பகுதிக்கு பேருந்தின் மூலம் கஞ்சா கடத்தி வந்து கடமலைக்குண்டு அருகே டானாதோட்டம் பகுதியில் ஆட்டோவில் மாற்ற முயன்றனர்.
அப்போது கடமலைக்குண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கஞ்சாவை ஆட்டோவில் மாற்ற முயன்றது தெரியவந்தது உடனடியாக போலீசார் கஞ்சா கடத்தி வந்த உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த மாயன், வனராஜா மற்றும் குமணன்தொழு பகுதியை சேர்ந்த சத்யராஜ் ஆகிய 3 பேர் கைது செய்தனர்
மேலும் கஞ்சா கடத்திய தொடர்பாக குமணன்தொழு பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணா ஆகிய இரண்டு பேரை கடமலைக்குண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.